For Daily Alerts
Just In
தமிழகத்தி்ல் 23 லட்சம் பேருக்கு எய்ட்ஸ்!
திருவள்ளூர்: தமிழகத்தி்ல் 23 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமி்ழ்நாடு எய்ட்ஸ் கட்டு்ப்பாட்டு வாரியம், திருவள்ளூர் மாவட்ட நி்ர்வாகம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் பேசிய சென்னை வி.எச்.எஸ். அமைப்பின் ஆலோசகர் டாக்டர் ரவிராஜ் வில்லியம்ஸ்,
நாட்டில் 3.3 கோடி பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில் தமிழகத்தில் மட்டும் 23.1 லட்சம் பேர் இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் 65 சதவீதம் பேர் ஆண்கள், 31 சதவீதம் பேர் பெண்கள். 4 சதவீதம் பேர் குழந்தைகள் ஆவர்.
நோயைத் தடுக்க தேசிய அளவில் தீவிரமான, தொடர் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மிக மிக அவசியம் என்றார்.
Comments
Story first published: Thursday, June 25, 2009, 17:07 [IST]