25 இலங்கை மீனவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 25 இலங்கை மீனவர்களை கடலோரக் காவல் படை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளது.
அவர்களிடமிருந்து 3000 கிலோ மீன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வந்த ஐந்து படகுகளையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணாம்பட்டினம் என்ற இடத்திலிருந்து 35 கடல் மைல் தொலைவில் இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து அவர்களைப் பிடித்த கடலோரப் படையினர் அந்த மீனவர்களையும், படகுகளையும் சென்னைக்குக் கொண்டு வந்தனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்தில் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications