Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 ஜி வசதி இருந்தும் முதல் தலைமுறையைக் கூட தாண்டாத பிஎஸ்என்எல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 3ஜி எனப்படும் அடுத்த தலைமுறைக்கான செல்போன் வசதியை அளிப்பதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவை மிக மோசமாக உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுவரை வெறும் 9 ஆயிரம் வாடிக்கையாளர்களே இந்த நிறுவனத்துக்கு உள்ளதும், அடுத்து வரும் செப்டம்பருக்குள் தனது 3 ஜி சேவைக்கு 1 லட்சம் வாடிக்கையாளர்களை மட்டுமே ஈர்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பிஎஸ்என்எல் நிறுவனமே அறிவித்துள்ளதைத் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

3 ஜி எனப்படும் நவீன மொபைல் சேவைக்குள் நுழைந்துள்ளது அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல். கடந்த பிப்ரவரியில் இந்த சேவை துவங்கப்பட்டது. 70 நகரங்களில் இந்த சேவை அளிக்கப்பட்டாலும், இதுவரை 9 ஆயிரம் சந்தாதாரர்கள் மட்டுமே இணைந்துள்ளனர் (அந்த லட்சணத்தில் இருக்கிறது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மற்றும் விளம்பரம்!)

இதுவே தனியார் துறையாக இருந்திருந்தால் இந்நேரம் இந்தியாவில் பாதியை ஏலத்தில் விட்டிருப்பார்கள். ஆனால் இப்படி ஒரு நவீன வசதி இருக்கிறது என்பதே வெளியில் தெரியாத அளவுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுப் பார்த்துக் கொள்கிறது பிஎஸ்என்எல்!

இப்போது இந்த 3 ஜி வசதியை 1000 நகரங்களுக்கு விரிவுபடுத்தப் போகிறதாம் பிஎஸ்என்எல். இந்த ஆயிரம் நகரங்களுக்கும் சேர்த்து 1 லட்சம் வாடிக்கையாளர்களை மட்டும் அடுத்த 3 மாதங்களுக்குள் சேர்க்கப்போகிறார்களாம் (இலக்கைக் கூட உயர்ந்த அளவு நிர்ணயிக்கிறார்களா பாருங்கள்!).

"அதாவது இவர்களின் டார்கெட் சராசரியாக ஒரு நகரத்துக்கு 100 வாடிக்கையாளர்கள். அவ்வளவுதான். மற்ற வாடிக்கையாளர்களை பகிரங்கமாக தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்கள் என்று அர்த்தம்", என்கிறார் தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றும் ஒரு 'நல்லவர்'.

3ஜி சேவையில் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் மொபைலில் பெற முடியும். குறிப்பாக, வீடியோ சாட்டிங், கேம்ஸ், அதிவேக இன்டர்நெட் வசதி, தொலைக்காட்சி பார்க்கும் வசதி... இப்படி எல்லாமே உண்டு. இதை முறைப்படி விளம்பரப்படுத்தி, அனைவருக்கும் எளிதில் கிடைக்கும்படி செய்தால், இந்தியாவில் பல கோடி சந்தாரர்கள் பிஎஸ்என்எல்லைத் தேடி வருவார்கள்.

ஆனால் பிஎஸ்என்எல் ஊழியர்களோ, விவரம் கேட்டு வருபவர்களை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்கிறார்கள். குறிப்பாக விவரக் குறிப்புகளைக் கூட சொல்ல ஆளில்லை, வாடிக்கையாளர் பிரிவுகளில்.

இல்லாவிட்டால் 70 நகரங்களில் கடந்த 4 மாதங்களில் வெறும் 9 ஆயிரம் வாடிக்கையாளர்கள்தான் இருக்கிறார்கள் என்பதை இவ்வளவு பகிரங்கமாக கொஞ்சமும் குற்ற உணர்ச்சியின்றி சொல்வாரா, பிஎஸ்என்எல் சேர்மன் குல்தீப் கோயல்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+