3 ஜி வசதி இருந்தும் முதல் தலைமுறையைக் கூட தாண்டாத பிஎஸ்என்எல்!
டெல்லி: 3ஜி எனப்படும் அடுத்த தலைமுறைக்கான செல்போன் வசதியை அளிப்பதில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவை மிக மோசமாக உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுவரை வெறும் 9 ஆயிரம் வாடிக்கையாளர்களே இந்த நிறுவனத்துக்கு உள்ளதும், அடுத்து வரும் செப்டம்பருக்குள் தனது 3 ஜி சேவைக்கு 1 லட்சம் வாடிக்கையாளர்களை மட்டுமே ஈர்க்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பிஎஸ்என்எல் நிறுவனமே அறிவித்துள்ளதைத் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
3 ஜி எனப்படும் நவீன மொபைல் சேவைக்குள் நுழைந்துள்ளது அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல். கடந்த பிப்ரவரியில் இந்த சேவை துவங்கப்பட்டது. 70 நகரங்களில் இந்த சேவை அளிக்கப்பட்டாலும், இதுவரை 9 ஆயிரம் சந்தாதாரர்கள் மட்டுமே இணைந்துள்ளனர் (அந்த லட்சணத்தில் இருக்கிறது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மற்றும் விளம்பரம்!)
இதுவே தனியார் துறையாக இருந்திருந்தால் இந்நேரம் இந்தியாவில் பாதியை ஏலத்தில் விட்டிருப்பார்கள். ஆனால் இப்படி ஒரு நவீன வசதி இருக்கிறது என்பதே வெளியில் தெரியாத அளவுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுப் பார்த்துக் கொள்கிறது பிஎஸ்என்எல்!
இப்போது இந்த 3 ஜி வசதியை 1000 நகரங்களுக்கு விரிவுபடுத்தப் போகிறதாம் பிஎஸ்என்எல். இந்த ஆயிரம் நகரங்களுக்கும் சேர்த்து 1 லட்சம் வாடிக்கையாளர்களை மட்டும் அடுத்த 3 மாதங்களுக்குள் சேர்க்கப்போகிறார்களாம் (இலக்கைக் கூட உயர்ந்த அளவு நிர்ணயிக்கிறார்களா பாருங்கள்!).
"அதாவது இவர்களின் டார்கெட் சராசரியாக ஒரு நகரத்துக்கு 100 வாடிக்கையாளர்கள். அவ்வளவுதான். மற்ற வாடிக்கையாளர்களை பகிரங்கமாக தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்கள் என்று அர்த்தம்", என்கிறார் தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றும் ஒரு 'நல்லவர்'.
3ஜி சேவையில் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் மொபைலில் பெற முடியும். குறிப்பாக, வீடியோ சாட்டிங், கேம்ஸ், அதிவேக இன்டர்நெட் வசதி, தொலைக்காட்சி பார்க்கும் வசதி... இப்படி எல்லாமே உண்டு. இதை முறைப்படி விளம்பரப்படுத்தி, அனைவருக்கும் எளிதில் கிடைக்கும்படி செய்தால், இந்தியாவில் பல கோடி சந்தாரர்கள் பிஎஸ்என்எல்லைத் தேடி வருவார்கள்.
ஆனால் பிஎஸ்என்எல் ஊழியர்களோ, விவரம் கேட்டு வருபவர்களை அவமானப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்கிறார்கள். குறிப்பாக விவரக் குறிப்புகளைக் கூட சொல்ல ஆளில்லை, வாடிக்கையாளர் பிரிவுகளில்.
இல்லாவிட்டால் 70 நகரங்களில் கடந்த 4 மாதங்களில் வெறும் 9 ஆயிரம் வாடிக்கையாளர்கள்தான் இருக்கிறார்கள் என்பதை இவ்வளவு பகிரங்கமாக கொஞ்சமும் குற்ற உணர்ச்சியின்றி சொல்வாரா, பிஎஸ்என்எல் சேர்மன் குல்தீப் கோயல்!
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்!












Click it and Unblock the Notifications