ரங்கசாமி மீது காங். மேலிடம் நடவடிக்கை-நாராயணசாமி
புதுச்சேரி: எனக்காக பிரசாரம் செய்யும்படி 3 முறை வலியுறுத்தி அழைத்தும் வராமல் சேலம் போய் விட்டார் ரங்கசாமி. அவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
இது குறித்து புதுச்சேரியில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
புதுச்சேரி விமானதளத்தில் இருந்து 50 பேர் செல்லக்கூடிய விமானத்தை இயக்க முடியும். ஆனால் 150 பேர் பயணம் செய்யும் பெரிய விமானத்தை இயக்க கூடுதலாக ஆயிரம் மீட்டர் ஓடுதளம் தேவைப்படுகிறது. இதற்கு மத்திய அரசிடம் நிதியும், தமிழக அரசிடம் நிலமும் கேட்டுள்ளோம்.
புதுச்சேரியில் மேல் சபை நாடாளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் பேசி முடிவு செய்வார்கள்.
முன்னாள் முதல்வர் ரங்கசாமி 8 ஆண்டுகள் அமைச்சராகவும், 7 ஆண்டுகள் முதல்வராகவும் இருந்துள்ளார். ஆனால் அவர் கட்சிக்கு பணியாற்ற தவறி விட்டார்.
நாடாளுமன்ற தேர்தலின் போது அவரை தொடர்ந்து 3 முறை சந்தித்து பிரசாரம் செய்யும் படி கேட்டுக் கொண்டேன். கடைசி நாளில் அவர் பிரசாரம் செய்ய வருவதாக கூறினார். ஆனால் முந்தைய நாள் இரவே சேலத்திற்கு சென்று விட்டார். அவர் மீது கட்சியின் தலைமையகத்தில் புகார் செய்துள்ளேன்.
அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் என்பதால் அவர் மீதான நடவடிக்கைகளை கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும். மற்றவர்கள் மீதான நடவடிக்கையை மாநில தலைமையகம் முடிவு செய்யும்.
வணங்காமண்-மன்மோகனுக்கு கடிதம்...
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனுப்பிய உணவு மற்றும் மருந்து பொருட்களை ஏற்றி வந்த கப்பலை அனுமதிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
நான் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் குறித்து டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினேன்.
அப்போது, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அனுப்பியுள்ள நிவாரண பொருட்கள் கப்பலை இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்றும், அதோடு போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் மறுவாழ்வுக்கும் அதிகார பகிர்வுக்கும் இலங்கை அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு நிர்பந்திக்க முன் வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன் என்றார் நாராயணசாமி.
-
மாணிக்கம் தாகூர் ராஜினாமா.. என்னதான் ஆச்சு காங்கிரசுக்கு? கண்டுக்கொள்ளாத ராகுல் காந்தி -
பேப்பரை அடித்து திருத்திய ராகுல்.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை.. இன்னும் தேர்வு செய்யாதது ஏன்? -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
இதென்ன லிஸ்ட்.. வேலைக்கு ஆகாது.. தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை.. விட்டு வீசிய ராகுல் காந்தி -
தீராத "கேரளா" தலைவலி.. வென்றாலும் கூட நிம்மதியாக இருக்க முடியாது! என்ன செய்ய போகிறார் ராகுல்? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது?












Click it and Unblock the Notifications