அமைச்சர் பெரியகருப்பன் கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

Subscribe to Oneindia Tamil

இளையாங்குடி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்ட கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசியதில் ஓருவருக்கு காயம் ஏற்பட்டது. அமைச்சர் காயமின்றி தப்பினார்.

இளையாங்குடி ஒன்றியம் சூராணத்தில் தி.மு.க., சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

விழா மேடையில் அமைச்சர் பெரியகருப்பன், முன்னாள் அமைச்சர் தென்னவன், ஒன்றிய செயலாளர் மதியரசன், ஊராட்சி ஒன்றிய தலைவர் தேன்மொழி, ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ராஜரத்தினம் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

அப்போது, மேடையில் திமுக பேச்சாளர் வெற்றிகொண்டான் பேசிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் சிலரால் மேடையை நோக்கி பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டது.

அப்போது, மேடையில் இருந்த தி.மு.க.,பிரமுகர் பிரான்சிஸ் (45) என்பவர் மேல் வெடிகுண்டு பட்டு வெடித்ததில் அவர் காயமடைந்தார். அமைச்சர் பெரியகருப்பன் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.

காயமடைந்த பிரான்சிஸ் இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து ஒன்றிய செயலாளர் மதியரசன் சூராணம் போலிசில் புகார் செய்துள்ளார்.

தகவல் அறிந்த சிவகங்கை டி.எஸ்.பி., ஜாம்சன் சம்பவ விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+