ஆபரேஷன் செய்த துப்புரவு தொழிலாளி-மபி.யில் அதிர்ச்சி
போபால்: மத்திய பிரதேசம் மாநில அரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளி ஒருவர் மூன்று வயது குழந்தைக்கு ஆபரேஷன் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சாகர் நகரில் உள்ள குலாப் காலனியை சேர்ந்தவர் சஞ்சீவன் மிஸ்ரா. இவர் தனது மூன்று வயது குழந்தை ஆர்பித்துடன் நேற்று அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு வந்தார்.
அப்போது குழந்தையை பரிசோதித்த டாக்டர் ஆர்.சி.மிஸ்ரா என்பவர் அந்த குழந்தையின் கழுத்தில் லேசான கட்டி இருப்பதை கண்டுபிடித்தார். பின்னர் சிறிய ஆபரேஷன் செய்தால் கட்டியை அகற்றிவிடலாம் என கூறி மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்த ராம் சரண் என்பவரை அழைத்து குழந்தையை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து போக சொன்னார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து டாக்டர் ஆபரேஷன் தியேட்டருக்கு சென்று பார்த்த போது குழந்தை அங்கு இல்லாததை கண்டு விசாரித்தார். அப்போது துப்புரவு தொழிலாளி ராம்சரண் குழந்தைக்கு ஆபரேஷன் செய்து வார்டில் சேர்த்துவிட்டதாக அங்கிருந்த மற்றொரு ஊழியர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை அறிந்த குழந்தையின் தந்தை அதிர்ச்சியடைந்தார். துப்புரவு தொழிலாளி ராம்சரண் தன்னை டாக்டர் ஆபரேஷன் செய்யுமாறு கூறினார் என்றார். ஆனால், டாக்டர் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்லுங்கள் என்று தான் கூறினேன் என்கிறார்.
இருவரும் மாற்றி மாற்றி ஒருவர் மீது ஒருவர் பலி போட்டு வந்தாலும், அதிர்ஷ்டவசமாக அந்த குழந்தை தற்போது மருத்துவமனையில் நல்ல நிலையில் இருக்கிறது. துப்புரவு தொழிலாளி ராம்சரண் மருத்துவமனையில் ஆபரேஷன் போது டாக்டர்களுக்கு உதவி செய்து வந்துள்ளார். அந்த அனுவத்தில் ஆபரேஷன் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து மத்திய பிரதேச சுகாதார துறை விசாரணைக்கு உத்தரவி்ட்டுள்ளது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications