சடகோபன் ரமேஷ் பெற்றோரிடம் ரூ50,000 கொள்ளை
சென்னை: இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷின் பெற்றோரிடம் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியில் துவக்க வீரராக விளையாடியவர் சடகோபன் ரமேஷ். சென்னையை சேர்ந்த இவர் இதுவரை 19 டெஸ்ட் மற்றும் 24 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். பின்னர் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் சில டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
கடந்தாண்டு ஏப்ரலில் வெளிவந்த சந்தோஷ் சுப்ரமணியம் படத்திலும் நடித்துள்ளார். மடிப்பாக்த்தில் வசித்து வரும் அவரது பெற்றோர்கள் நேற்று ஆலந்தூர் செல்வதற்காக மாநகராட்சி பேருந்து ஒன்றில் ஏறினார். அவர்கள் கையில் வைத்திருந்த பையில் ரூ. 50 ஆயிரம் மதிப்பு கொண்டு ரொக்க பணமும், நகைகளும் இருந்துள்ளது.
பேருந்தில் கூட்டம் நெருக்கி அடித்ததால் இருவரும் நின்றவாரே பயணம் செய்துள்ளனர். அப்போது கூட்டத்தில் இருந்த பலே ஆசாமி ஒருவன் அவர்கள் வைத்திருந்த பையின் அடிப்பகுதியை கிழித்து உள்ளே இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தப்பிவிட்டான்.
பேருந்தில் இறங்கிய பின்னர் தான் பை கிழிந்திருப்பதையும், அதிலிருந்த பணம் காணாமல் போனதையும் சடகோபனின் பெற்றோர்கள் அறிந்தனர். இதையடுத்து அவர்கள் மடிப்பாக்கம் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் நடத்துனரிடம் விசாரணை செய்தனர்.
நடத்துனர் அவர்களிடம் கூறுகையில்,
மடிப்பாக்கம், ஆலந்தூர் செல்லும் பேருந்துகளில் இது போன்ற செயல்களில் ஈடுபடும் மர்ம ஆசாமிகள் அதிகம் வருகின்றனர். சிலரை பார்த்ததும் நாங்கள் கண்டுபிடித்து மக்களை உஷார் செய்துவிடுவோம். சில சமயங்களில் கூட்டம் அதிகமிருப்பதால் டிக்கெட் கொடுக்கவே நேரம் இருக்காது என்பதால் அவர்களை கவனிக்க முடியாமல் போய்விடுகிறது என்றார்.
இதையடுத்து மடிபாக்கம் பகுதியில் கூடுதல் போலீசாரை பணியில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications