ஜாக்சன் உடலுக்கு 2வது முறையாக பிரேதப் பரிசோதனை நடந்தது
லாஸ் ஏஞ்செலஸ்: பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை அறிவதற்காக அவரது குடும்பத்தினர் தனியாக பிரேதப் பரிசோதனை ஒன்றை நடத்தியுள்ளனர்.
ஜாக்சன் மறைவுக்கு முன்பும் சர்ச்சைகளுடன் வாழ்ந்தார். இறந்த பின்னரும் எப்படி இறந்தார் என்பதில் குழப்பமும், சர்ச்சையும் நிலவி வருகிறது.
ஜாக்சனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைவதற்கு முன்பு அவருடன் கடைசியாக இருந்தவர் டாக்டர் கோன்ராட் முரே என்பவர். அவர் ஜாக்சன் மறைவுக்குப் பின்னர் காணாமல் போய் விட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் டாக்டரை போலீஸார் தேடிக் கண்டுபிடித்து விட்டனர்.
முரே போட்ட ஊசிக்குப் பின்னர்தான் ஜாக்சன் மறைந்ததாக ஒரு தகவல் உள்ளது. மேலும் ஓவர் டோஸ் மருந்துகளும் ஜாக்சன் உயிரைக் குடித்து விட்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.
இதனால் அவரது பிரேதப் பரிசோதனை முடிவுகளை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பிரேதப் பரிசோதனையை முடித்த போலீஸார் முடிவை மட்டும் அறிவிக்கவில்லை. மேலும் சில சோதனைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்தனர். உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து ஜாக்சனின் குடும்பத்தினர் தனியாக ஒரு பிரேதப் பரிசோதனையை நடத்த தீர்மானித்துள்ளதாக அவரது குடும்ப நண்பரான பாதிரியார் ஜெஸி ஜாக்சன் தெரிவித்திருந்தார்.
அதன்படி நேற்று மீண்டும் ஒரு பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. எங்கு வைத்து இந்தப் பரிசோதனை நடந்தது என்று தெரிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே, ஜாக்சனின் இறுதிச் சடங்குகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications