பட்ஜெட்டில் நிறைய வரிச் சலுகைகளுக்கு வாய்ப்பு?

தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் தனி நபர்களுக்கும் ஏராளமான வரிச் சலுகைகள் அறிவிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் நிறுவனங்களுக்கான வரி விதிப்பு 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை குறைக்கப்படும் எனத் தெரிகிறது.
வருமான வரி உச்சவரம்பு ரூ. 2.5 லட்சமாகலாம்...
அதேபோல, தனி நபர் வருமான வரி உச்சவரம்பு அளவு ரூ. 1.5 லட்சம் என்பதிலிருந்து ரூ. 2.5 லட்சமாக அதிரடியாக குறைக்கப்படக் கூடும்.
கடந்த சில ஆண்டுளாக அரசின் வரி வருவாய் வலுவான நிலையில் உள்ளதால் இத்தகைய நடவடிக்கைளை அரசு மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.
இருப்பினும் தொழில் நிறுவனங்கள் மீதான துணை வரி நீக்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
முதலீட்டுப் படி..
உற்பத்திப் பிரிவுக்கு ஊக்கம் தருவதற்காக முதலீட்டு படியை என்ற திட்டத்தை பிரணாப் முகர்ஜி தீட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒரு நிறுவனம் கூடுதல் தொகையை செலவிட முடிவு செய்தால், அந்த கூடுதல் தொகையை, அந்த நிறுவனத்தின் வரிக்குட்பட்ட வருவாயிலிருந்து கழித்துக் கொள்ளலாம்.
பட்ஜெட்டில் இடம் பெறப் போகும் வரிச் சலுகைகள் குறித்து இன்னும் சில நாட்களில் பிரணாப் முகர்ஜி இறுதி செய்வார் எனத் தெரிகிறது.
முன்னாள் வருவாய் செயலாளர் நாராயணன் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் குறித்துக் கூறுகையில், தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் பெருமளவில் சலுகைகள் இருக்கக் கூடும்.
அதேபோல முதலீட்டுப் படித் திட்டத்தால் உற்பத்திப் பிரிவுக்கு பெரும் ஊக்கம் கிடைக்கும். இது ஒரு நல்ல திட்டமாகவும் அமையும் என்றார்.
ஜூலை 6ம் தேதி பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார் பிரணாப் முகர்ஜி.












Click it and Unblock the Notifications