சட்டசபை வளாகத்தில் விரைவில் ஜிம் - சபாநாயகர் தகவல்
சென்னை: சட்டசபை உறுப்பினர்களுக்கான உடற் பயிற்சி நிலைவில் விரைவில் தயாராகி விடும் என சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று கேள்விநேரத்தின் போது காங்கிரஸ் உறுப்பினர் வேல்துரை பேசுகையில், விளையாட்டு துறை அமைச்சர் தனது இளமைக் காலத்தில் அனைத்து விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கியிருப்பார்.
எம்.எல்.ஏ.க்களுக்கு உடற்பயிற்சி நிலையம் அமைத்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது, எந்த நிலையில் அது உள்ளது? என்றார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் மைதீன்கான், உறுப்பினர் கூறிய அனைத்து விளையாட்டுகளிலும் தேர்ந்தவர் என்ற சான்றிதழை முதல்-அமைச்சரே எனக்கு தந்திருக்கிறார். உறுப்பினர்களுக்கான உடற்பயிற்சி மையம் விளையாட்டு துறை சார்பில் அறிவிக்கப்படவில்லை, சட்டப்பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டது என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஆவுடையப்பன், அந்த உடற்பயிற்சி நிலையம் தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் அது தொடங்கி வைக்கப்படும் என்றார்.