நன்கொடை-கோட்டையை முற்றுகையிட்ட மாணவர்கள்
சென்னை: பள்ளி மற்றும் கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் கொள்ளையடித்து வரும் கல்லூரி நிர்வாகத்தை தண்டிக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என கோரி அகில இந்திய மாணவர்கள் கழகம் சார்பில் இன்று சென்னையில் கோட்டை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இதில் ஈடுபட்ட சுமார் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
சமீபகாலமாக கல்வி வியாபாரமாகி வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் ஆயிரம் முதல் லட்சம் வரை பணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் பல ஏழை மாணவர்களுக்கு உயர் படிப்பு என்பது வெறும் கனவாக போய்விட்டது. தனியார் கல்லூரி மற்றும் பள்ளிகளை தொடர்ந்து அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் நன்கொடை ஆரம்பிக்க தொடங்கியிருப்பது வேதனையின் உச்சக்கட்டம்.
ஏழைகள் வாழ்வில் முன்னேறுவதற்கு ஒரே நம்பிக்கையாக இருக்கும் கல்வியும் இது போன்ற செயல்களால் கலப்படமாகி வருவது அவர்களது வாழ்க்கையை கேள்வி குறியாக்கிவிடுகிறது. கல்வித்துறையில் இருக்கும் இது போன்ற சீர்கேடுகளை உடனடியாக களைந்தால் தான் ஏழை குழந்தைகள் படிக்க முடியும்.
இந்நிலையில் இது தொடர்பாக தற்போதைய சட்டசபை கூட்டத்தொடரில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அதை சட்டமாக்க வேண்டும் என கூறி இந்திய மாணவர்கள் கழகம் சார்பில் மாணவர்கள் இன்று சென்னையில் அரசு தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 70 பேரை கைது செய்தனர்.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது












Click it and Unblock the Notifications