கோவை மாநகராட்சி-ஒரே நாளில் 53 பேர் ஓய்வு
கோவை: கோவை மாநகராட்சியில் பணியாற்றிய 53 ஊழியர்கள் ஒரே நாளில் ஓய்வு பெற்றனர்.
கோவை மாநகராட்சியில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், மாநகராட்சியில் பணியாற்றிய 53 பேர் ஒரே நாளில் ஓய்வு பெற்றனர்.
ஓய்வு பெற்றவர்களுக்கு மேயர் ஆர்.வெங்கடாசலம் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் பாராட்டுவிழா நடைபெற்றது.
அப்போது, ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள், இனிப்பு ஆகியவை வழங்கப்பட்டன. அனைத்து பணியாளர்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
உதவி செயற்பொறியாளர் (மின்சாரம்) அமானுல்லா, நிர்வாக அலுவலர்-ஞானசெளந்தரி, உதவி வருவாய் அலுவலர் சரோஜினி, 21 பொறியியல் தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் 27 துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் ஓய்வு பெற்றனர்.
தமிழகத்தில் மாநகராட்சியில் ஒரே சமயத்தில் 53 பேர் ஓய்வு பெற்றது இது தான் முதல் முறை என கூறப்படுகின்றது.