தேசிய கொடி ஏற்றும் நிபந்தனை: குழு அமைக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
சென்னை: தேசியக் கொடியை எரிக்க முயன்ற வழக்கில் கைதான 3 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனையை தளர்த்தக் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
மேலும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டிய கடமைகளை தெரிந்து கொள்வது குறித்தும், அதனை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்தும் ஆராய தமிழக அரசு குழு ஒன்றை அமைத்து 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்
என்றும் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழர் தேசிய இயக்கம், தமிழர் பொதுவுடமை கட்சி ஆகியவற்றின் சார்பில் கோவையில் நடந்த போராட்டத்தில் தேசியக் கொடியை எரிக்க முயன்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் இவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி ரகுபதி, 8 பேரையும் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இந்த 8 பேரும் ஒரு வாரத்திற்கு தங்கள் வீட்டு முன் கலையில் தேசியக் கோடி ஏற்ற வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
ஆனால் இந்த நிபந்தனையை தமிழரசன், பாரதி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இந்த ஏற்க மறுத்ததோடு, கொடி ஏற்ற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்று கோரி இன்னொரு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவும் நீதிபதி ரகுபதி முன்பு விசாரணைக்கு வந்தது. இதன் மீது இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி கூறியதாவது:
தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த முடியாது. இதை ஏற்காவிட்டால் அவர்கள் தொடர்ந்து சிறையிலேயே இருக்கட்டும். இந்த வழக்கில் போலீசார் விரைவில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்து வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்.
அரசியல் அமைப்பு சட்டம் 5வது பிரிவு தேசியக் கொடி, தேசிய கீதம், அரசியல் அமைப்பு சட்டம் ஆகியவற்றை அனைத்து குடிமக்களும் மதிக்க வேண்டும் என்று கூறுகிறது.
அரசியல் அமைப்பு சட்டத்தி்ன் 51-ஏ பிரிவு, தேசிய கீதம், தேசியக் கொடி ஆகியவற்றில் குடிமக்களுக்கு உள்ள கடமைகள் பற்றி எடுத்துக் கூறுகிறது.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டிய கடமைகளை தெரிந்து கொள்வது குறித்தும், அதனை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்பது குறித்தும் ஆராய தமிழக அரசு குழு ஒன்றை அமைத்து 2 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications