Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தாண்டு 7% வளர்ச்சி-மத்திய அரசு நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்த ஆண்டு இந்தியா 7 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டும். அதன் பின்னர் வரும் ஆண்டுகளில் இது மேலும் விரிவடையும் என நாடாளுமன்றத்தில் இன்று மத்திய அரசு தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சகம் பட்ஜெட்டுக்கு முன்பாக பொருளாதார ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது. வருகிற திங்கள்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுள்ள நிலையி்ல பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை இன்று லோக்சபாவில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்..

இதில் பணவீக்கம் நீண்ட கால பிரச்சினையாக இருக்காது என்று நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 3 சதவீத பொருளாதார பற்றாக்குறை இலக்கை விரைவில் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை கடந்த 2008-09ம் ஆண்டில் 6.2 சதவீதமாக இருந்தது. உலகப் பொருளாதார சீர்குலைவால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விடாமல் இருப்பதற்காக மத்திய அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந் பற்றாக்குறை அதிகரிப்பு ஏற்பட்டது.

இந்தியாவின் பொருளாதார நிலை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது திருப்தி அளிப்பதாகவும், உற்சாகம் தருவதாகவும் இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதார நிலை மந்தமாக இருந்தாலும் கூட அதைத் தாண்டி இந்தியப் பொருளாதாரம் சிறப்பான வளர்ச்சியைப் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் முக்கியமாக இடம் பெற்றுள்ள இன்னொரு அம்சம் என்னவென்றால், மத்திய அரசு நடத்தி நிறுவனங்களின் பங்குகளை விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் ரூ. 250 பில்லியன் தொகையை திரட்ட முடியும்.

உணவு மற்றும் உரத்துறையை மறு சீரமைக்க வேண்டும். ஸ்பெக்டரம் ஏலத்தை விரைவுபடுத்த வேண்டும் ஆகிய பரிந்துரைகளும் இந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.

அரசு மற்றும் தனியார் துறையினரால் மேற்கொள்ளப்படும் அடிப்படமைக் கட்டமைப்புத் துறை முதலீடுகளில் நிலவி வரும் தடங்கல்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டியது அவசியம், அவசரம் எனவும் அறிக்கை கூறுகிறது.

அதேபோல 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பை (goods and services tax -GST) அமல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால்தான் வருவாய் அதிகரிக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் அரசு பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைளை மேற்கொண்டால் நிச்சயம் பொருளாதார வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும் என்று இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+