வீட்டு சிறை-என்ஜினியர் மனைவி கோர்ட்டில் ஆஜர்
சென்னை: காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோரினால் வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்த பெங்களூர் என்ஜினியரின் மனைவி போலீசாரால் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சககராபள்ளியை சேர்ந்தவர் ஜீவானாந்தம். 30 வயதான இவர் பெங்களூரில் உள்ள தகவல் தொழிலிநுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவருடன் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த செந்தில் வடிவு(30) என்ற பெண்ணும் வேலை பார்த்து வந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு இருவருக்கும் காதலித்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த 14ம் தேதி இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டனர். சில நாட்கள் கழித்து கும்மிடிப்பூண்டிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற செந்தில் முடிவு பல நாட்களாகியும் பெங்களூர் திரும்பவில்லை.
அவரது மொபைல் போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் செந்தில் வடிவை அவரது பெற்றோர்கள் சிறைபிடித்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.
உடனே அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனது மனைவியை மீட்டு தருமாறு ஹேபியஸ் ஹார்பஸ் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் வடிவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு போலீசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து போலீசாரி கும்மிடிப்பூண்டி விரைந்து அங்கு வீட்டுசிறையில் வைக்கப்பட்டிருந்த செந்தில் வடிவை மீட்டு வந்து, நீதமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
அப்போது நீதிபதி முகோபாத்யாய, ராஜ இளங்கோவன் ஆகியோரிடம் செந்தில் வடிவு கூறுகையில், நான் ஜீவானாந்தத்தை விரும்பி காதல் திருமணம் செய்து கொண்டேன். வாழ்ந்தால் அவருடன் தான் வாழ்வேன். எங்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என கூறினார்.












Click it and Unblock the Notifications