உயர்நீதிமன்ற நீதிபதியை நான் மிரட்டவில்லை - ராஜா மறுப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மருத்துவ மாணவர் கிருபா ஸ்ரீதர் மற்றும் அவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்குமாறு கூறி மத்திய அமைச்சர் ஒருவர் தன்னை மிரட்டியதாக உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி பரபரப்பு குற்றம் சாட்டினார்.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், உயர்நீதிமன்ற வழக்குகளில் மத்திய அமைச்சர்கள் தலையிடக் கூடாது என்று கண்டித்திருந்தார்.
இந்த நிலையில் யார் அந்த அமைச்சர் என்ற கேள்வி எழுந்தது.
இந்தப் பின்னணியில், மத்திய அமைச்சர் ஒருவரின் பெயரைக் கூறி பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று சட்டசபையில் பிரச்சினை எழுப்பினர். இதற்கு திமுகவினர் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இதையடுத்து பாமக உறுப்பினர்களின் பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், நான் நீதிபதியை மிரட்டவில்லை. அதுதொடர்பாக வெளியாகும் செய்திகள் தவறு என்று மத்திய அமைச்சர் ராசா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் சார்பாக அவரது உதவியாளர் ஷாஜி குமார் அளித்துள்ள விளக்கத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதியை அமைச்சர் ராஜா தொலைபேசியல் தொடர்பு கொண்டதாக வெளியான தகவல் தவறு. இதை அமைச்சர் ஏற்கனவே மறுத்துள்ளார். இதில் அடிப்படை இல்லை என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications