சட்டசபையில் 'சிவலோகம்-பூலோகம்-வைகுண்டம்'!
சென்னை: சட்டசபையில் சிவலோகம்-பூலோகம்- வைகுண்டம் குறித்து சுவையான விவாதம் நடந்தது.
அவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் ஜான் ஜோசப், தனது விளவங்கோடு தொகுதியில் உள்ள சிவலோகம் பகுதியில் படகு சவாரி தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அப்போது நடந்த விவாதம்:
ஓ.பன்னீர்செல்வம் (அதிமுக): சிவலோகத்துக்குச் சென்றால் திரும்பி வர முடியாது. பிறகு, ஏன் சிவலோகத்தைப் பற்றி பேசுகிறார்.
சுதர்சனம் (காங்கிரஸ்): எதிர்க்கட்சித் துணைத் தலைவர் சிவலோகத்துக்குச் சென்று இருக்கிறாரா? அங்கு அவருக்கு யாராவது உறவினர்கள் இருக்கிறார்களா?.
சபாநாயகர் ஆவுடையப்பன்: பூலோகத்தைப் பற்றிப் பேசுங்கள்.
சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன்: விளவங்கோடு தொகுதியில் உள்ள சிவலோகத்தை நேரடியாகச் சென்று பார்த்தால் அதன் அருமை புரியும்.
அமைச்சர் துரைமுருகன்: சிவலோகம் பகுதி அமைந்துள்ள சிற்றார் 1 மற்றும் சிற்றார் 2 ஆகிய இடங்களில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான இரண்டு விடுதிகள் உள்ளன. அதன் பெயர்கள் என்ன தெரியுமா?.. சிவலோகம், வைகுண்டம்.
இதையடுத்து அவையில் பெரும் சிரிப்பொலி எழுந்தது