For Daily Alerts
Just In
இலங்கை தமிழர்களுக்கு பட்ஜெட்டில் ரூ. 500 கோடி
டெல்லி: இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் நலனுக்கு பட்ஜெட்டில் ரூ. 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று தாக்கல் செய்த 2009-10ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் குறித்து இந்தியா பெரும் கவலை கொண்டுள்ளது. இலங்கையில் 3 லட்சம் தமிழர்கள் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது மறுவாழ்வுக்கும் நிவாரணப் பணிகளுக்கும் 100 மில்லியன் டாலர்கள் (ரூ. 500 கோடி) ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியுதவியை தமிழர்களுக்கு உரிய முறையில் சேர்க்க வெளியுறவு அமைச்சகம் இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றும் என்றார்.
Comments
Story first published: Monday, July 6, 2009, 15:33 [IST]