For Daily Alerts
Just In
வாய்க்காலில் கிடந்த 2,000 வாக்காளர் அட்டைகள்
திருச்சி: திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள பத்தாலம்பேட்டை பகுதியில் வாய்க்காலை தூர்வாறும்போது சுமார் 2,000 வாக்காளர் அடையாள அட்டைகள் கிடைத்துள்ளன.
இதில் பாதிக்கும் மேற்பட்டவை எரிந்த நிலையில் இருந்தன.
இதையறிந்து ஓடி வந்த மக்கள் அதில் தங்களது பெயரிலான அட்டைகளும் இருந்தது கண்டு அதிர்ந்தனர்.
இந்த அட்டைகள் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள்ளன. இவற்றை வாய்க்காலில் புதைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோருகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் இந்த வாக்காளர் அடையாள அட்டைகள் இல்லாத காரணத்தினால் இப் பகுதி மக்கள் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Tuesday, July 7, 2009, 16:33 [IST]