அருணாச்சலுக்கு வழங்கப்படும் ஆசிய வங்கி கடனை சீனா தடுக்கிறது - எஸ்.எம்.கிருஷ்ணா
டெல்லி: அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நீர்ப்பாசனத் திடடத்திற்கு நிதியுதவி அளிக்கக் கூடாது என்று ஆசிய வளர்ச்சி வங்கியிடம் ஆட்சேபனை தெரிவித்துள்ளது சீனா. இது அப்பட்டமான உள்நாட்டுத் தலையீடாகும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
இதுகுறித்து ராஜ்யசபாவில் கேட்கப்பட்ட கேள்விக்கு கிருஷ்ணா பதிலளிக்கையில், ஆசிய வளர்ச்சி வங்கியின் அனைத்து உறுப்பு நாடுகளிடமும் இந்தியா தெளிவாக விளக்கம் அளித்துள்ளது. அரசியல் காரணங்களினால் ஒரு நாட்டுக்கு கடனுதவி தருவதை தடுக்க முடியாது என்பதை வங்கிக்கு விளக்கியுள்ளோம்.
இந்தியாவின் நிதித் திட்டங்களுக்கு சீனாவைத் தவிர அனைத்து ஆசிய வங்கி உறுப்பு நாடுகளும் ஆதரவாக உள்ளன.
அருணாச்சல் பிரதேசத்தில் நாம் மேற்கொள்ளவுள்ள நீர்ப்பாசனத் திட்டத்தை சீனா ஏற்கவில்லை. காரணம், அருணாச்சல் பிரதேசத்தை அது தனது நாட்டின் ஒரு பகுதியாக கூறி வருகிறது.
இதுகுறித்து உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கனடா, இந்தோனேசியா, கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், ஜெர்மணி, இத்தாலி ஆகிய நாடுகளிடம் நாம் விளக்கியுள்ளோம்.
இதை புரிந்து கொண்ட அந்த நாடுகள் சீனாவின் ஆட்சேபனை ஏற்க இயலாதது, முறையற்றது என்று கூறியுள்ளன.
சீனா உள்ளிட்ட உறுப்பு நாடுகளிடம் அருணாச்சல் பிரதேசம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதில் எந்தவித சமரசத்திற்கும் இடம் கிடையாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளோம்.
அருணாச்சல் பிரதேசம் நமது நாட்டின் ஒரு பகுதி என்பதை மிகவும் வலிமையான முறையில் ஆணித்தரமாக தெரிவித்து வருகிறோம்.
சீனாவுடனான எல்லைப் பிரச்சினைகளை சுமூகமான முறையில் தீர்க்கவே இந்தியா விரும்புகிறது. சீனாவுடன் நமது நாடு தோழமை உணர்வுடன்தான் உள்ளது.
எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்திய, சீன அதிகாரிகளின் கூட்டம் அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறவுள்ளது.
மேலும் விரைவில் நான் அருணாச்சல் பிரதேசம் செல்லவுள்ளேன். நமது குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் அருணாச்சல் பிரசேதத்திற்கு சென்றதை முன்பு சீனா குறை கூறியிருந்தது என்றார் கிருஷ்ணா.
-
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
கன்னியாகுமரியில் கடன் தந்த வங்கிக்கு ட்விஸ்ட் தந்த காங்கிரஸ் பெண் பிரமுகர்.. பாய்ந்த வழக்கு -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்!












Click it and Unblock the Notifications