தஞ்சாவூர் கல்லூரி சீட்-ஆந்திர மாணவி தற்கொலை

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என்ற தனது ஆசை நிறைவேறாத காரணத்தை அடுத்து ஆந்திர மாணவி ஒருவர் ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஆந்திர மாநிலம் கோதபேட்டையை சேர்ந்தவர் தேஜஸ்வி (19). அவர் தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அது நிறைவேறில்லை.

இதையடுத்து அவரது பெற்றோர்கள் அவரை அருகில் உள்ள என்ஜினியரிங் கல்லூரியில் சேர்த்துவிட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த பெண் இன்று காலை அபார்ட்மென்டின் ஐந்தாவது மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், அந்த பெண் நீண்ட நாட்களாக தான் விரும்பிய கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை என நினைத்து மனவேதனை அடைந்துள்ளார். அதனால் தான் இந்த துயர முடிவுக்கு வந்துள்ளார். தனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என தெலுங்கில் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+