தமிழக கோவில்களில் யோகா-தியான பயிற்சி
சென்னை: தமிழகம் முழுவதும் 52 கோவில்களில் பொது மக்களுக்கு தினமும் காலையில் யோகா- தியான பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அளிக்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
சட்டசபையில் இன்று தனது துறைக்கான மானிய கோரிக்கைகள் மீதான கொள்கை விளக்க குறிப்புகளை தாக்கல் செய்து அமைச்சர் கூறுகையில்,
நிதி வசதியும், இட வசதியும் உள்ள 52 கோவில்களில் பொது மக்கள் பக்தர்களின் உடல் நலத்தையும், மன நலத்தையும் பேணி காக்கும் பொருட்டு தினமும் காலையில் தகுதியான பயிற்சியாளர்களை கொண்டு யோகா- தியான பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
114 முக்கிய கோவில்களில் புதிதாக நூல் நிலையம் தொடங்கப்படும். ஏற்கனவே நூல் நிலையங்கள் இருந்தால் அவை மேம்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் 1,229 கோவில் குளங்களை மாவட்ட நிர்வாகம் மூலம் தூர்வாரி செப்பனிடவும் மழை நீர் சேமிப்பு வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவில்களில் திருட்டு, கொலை முதலிய நிகழ்வுகளை தடுக்க 31 கோவில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
337 கோவில்களில் எச்சரிக்கை மணிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 24 கோவில்களில் எச்சரிக்கை மணி அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, ராமேசுவரம், ஸ்ரீரங்கம், பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோவில் ஊழியர்களுக்கான ஓய்வூதியம் ரூ. 750ல் இருந்து 800 ஆக உயர்த்தப்படும். நிதி வசதியி்ல்லாத கோவில்களில் பூஜைகள் செய்யும் பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும.
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பாகக் கொண்டாடப்படும் என்றார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications