For Daily Alerts
Just In
துரைமுருகனிடமிருந்து பொதுப்பணித்துறை திடீர் பறிப்பு
அமைச்சர் துரைமுருகன் வசம் சட்டம், பொதுப்பணித்துறை ஆகியவை இருந்து வந்தது.
இந்த நிலையில் திடீரென பொதுப்பணித்துறை அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. அவர் இனி சட்ட அமைச்சராக மட்டும் தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதியே பொதுப்பணித்துறையை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை, முதல்வர் பரிந்துரையின் பேரில், ஆளுநர் பர்னாலா பிறப்பித்துள்ளார்.
துரைமுருகன் வசம் இருந்து வந்த பொதுப்பணித்துறை ஏன் பறிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இருப்பினும் முல்லைப் பெரியாறு அணை, பாலாறு அணை உள்ளிட்டவற்றில் துரைமுருகனின் செயல்பாடுகள் மீது முதல்வர் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Comments
அரசியல் karunanidhi தமிழ்நாடு கருணாநிதி அமைச்சர் துரைமுருகன் government அரசு tamilnadu பொதுப்பணித்துறை law சட்ட அமைச்சர்
Story first published: Sunday, July 12, 2009, 16:22 [IST]