துரைமுருகனிடமிருந்து பொதுப்பணித்துறை திடீர் பறிப்பு
Subscribe to Oneindia Tamil

அமைச்சர் துரைமுருகன் வசம் சட்டம், பொதுப்பணித்துறை ஆகியவை இருந்து வந்தது.
இந்த நிலையில் திடீரென பொதுப்பணித்துறை அவரிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. அவர் இனி சட்ட அமைச்சராக மட்டும் தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதியே பொதுப்பணித்துறையை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை, முதல்வர் பரிந்துரையின் பேரில், ஆளுநர் பர்னாலா பிறப்பித்துள்ளார்.
துரைமுருகன் வசம் இருந்து வந்த பொதுப்பணித்துறை ஏன் பறிக்கப்பட்டது என்பது தெரியவில்லை. இருப்பினும் முல்லைப் பெரியாறு அணை, பாலாறு அணை உள்ளிட்டவற்றில் துரைமுருகனின் செயல்பாடுகள் மீது முதல்வர் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications