தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு ஸ்வைன்-இதுவரை 14
சென்னை: உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
மெக்சிகோவில் தொடங்கி உலக நாடுகள் பலவற்றையும் பன்றிக் காய்ச்சல் பெரும் பீதியூட்டி வருகிறது.
இந்தியாவில் 200க்கும் மேற்பட்டோருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்றியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கனவே 8 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியிருப்பது உறுதியாகியுள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் சவூதியிலிருந்து சென்னை வந்தவர்கள்.
2 பேர் மாணவர்கள். இவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள்.
அதேபோல ஈரோட்டைச் சேர்ந்த ஹரிராஜன் என்பவரும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நான்கு நாள் சுற்றுப் பயணமாக மலேசியா போனவருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்றி விட்டது. கோவை அரசு மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications