ஊட்டியில் கன மழை-வெள்ளத்தில் சி்க்கிய மாணவிகள்
ஊட்டி: தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் ஊட்டி உள்பட நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இதையடுத்து நீலகிரியில் பல பகுதிகளில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
ஊட்டி அருகே ஒரு பள்ளியை வெள்ளம் சூழ்ந்து கொண்டுள்ளது. அந்தப் பள்ளியில் 23 மாணவிகள் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்க தீயணைப்புப் படையினரும் போலீசாரும் முயன்று வருகின்றனர்.
இன்று காலை ஊட்டி-கூடலூர் ரோட்டில் உள்ள டி.ஆர். பஜார் என்னும் இடத்தில் ராட்சத கற்பூர மரம் சரிந்து ரோட்டில் விழுந்தது. இதனால் கூடலூர், ஊட்டி, மைசூர், கேரளா செல்லும் வாகனங்கள் நடுவழியில் நின்றன.
நெடுஞ்சாலை துறையினரும், வனத்துறையினரும் மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் இந்தப் பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
மழை காரணமாக நாளையும் நீலகிரி மாவட்டத்தி்ன் பல பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications