பருப்பு விலை-பேட்ஜுடன் வந்த கம்யூ. எம்எல்ஏக்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை: பருப்பு விலை வரலாறு காணாத அளவுக்கு கடுமையாக உயர்ந்து வருவதைக் கண்டித்து கம்யூ. எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு பேட்ஜ் அணிந்து சபைக்கு வந்தனர்.
பருப்பு விலை மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக துவரம் பருப்பு விலை இல்லத்தரசிகளுக்கு பெரும் துயரமாக மாறியுள்ளது.
பருப்பு தவிர பயறு, காய்கறிகள் உள்ளிட்டவற்றின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை, சட்டசபைக்கு வந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்கள், "மத்திய அரசே பருப்பு விலை உயர்வை தடுத்து நிறுத்து, ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை செய்" என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய அட்டையை சட்டையில் குத்தி இருந்தனர்.
இதேபோல இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ.க்களும் இதேபோன்ற பேட்ஜ் அணிந்து சபை நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications