மீன் விலை திடீர் சரிவு-மீண்டும் கடலுக்குள் மீன்கள்!
Subscribe to Oneindia Tamil

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுதுறையில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.
மீனவர்கள் வலையில் தற்போது பெரும்பாலும் மத்தி மீன்களே அதிகளவில் கிடைத்து வருகின்றன. ஆனால் இந்த வகை மீன்களை வாங்க வியாபாரிகள் முன் வருவதில்லை. இதனால் இந்த வகை மத்தி மீன்களை அதிகளவில் கேரளாவுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
தற்போது, கேரளாவில் மத்தி மீன்கள் விலை மிகவும் குறைந்து விட்டது. இதனால் 100 கிலோ மீன்கள் கொண்ட பெட்டி வெறும் ரூ.20 க்கு தான் விற்பனையாகிறது.
இதனால் மனம் உடைந்த மீனவர்கள் வலையில் சிக்கிய மீன்களை மீண்டும் கடலிலேயே திருப்பி கொட்டி வருகின்றனர்.
இதுவரை கடந்த 3 நாட்களாக கடலில் பிடிபட்ட 6 டன் மத்தி மீன்களை மீண்டும் கடலிலேயே கொட்டியுள்ளதாக மீனவ சங்க பிரநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications