For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பூர் நிறுவனங்கள் ரூ.50000 கோடி கடன் பாக்கி; 1 லட்சம் பேர் வேலை இழப்பு

By Staff
Google Oneindia Tamil News

Industry
சென்னை: பி்ன்னலாடைத் தொழிலில் நாட்டில் முன்னணியில் உள்ள திருப்பூர் மற்றும் கோவை நகரங்கள் பொருளாதார நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நகரங்களில் இயங்கும் தொழிற்சாலைகள் மட்டுமே வங்கிகள் மற்றும் பல்வேறு அரசு - தனியார் நிதி நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய கடன் பாக்கி ரூ. 50 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.

பெருமளவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாலேயே இவ்வளவு கடன் பாக்கி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பொருளாதார மந்தம் மட்டுமல்லாமல், மின்துறையில் அரசின் அலட்சியமும், அரசுத் தரப்பில் உற்பத்தியாளர்களுக்கு எந்த சலுகையும் இல்லாததும்கூட உற்பத்தி முடங்க முக்கிய காரணம் என்று திருப்பூர், கோவை நகரங்களின் தொழில் முனைவோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடன்பாக்கி வைத்துள்ளோரில் பெரும்பாலானோர், சைமா (SIEMA)வில் உறுப்பினர்களாக உள்ளவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

பல தொழில் நிறுவனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த நகரங்களில் மூடப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் திருப்பூர் மற்றும் கோவையில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X