'இலங்கை': இந்தியாவுக்கு முக்கிய பங்கு-யுஎஸ்
வாஷிங்டன்: இலங்கை இனப் பிரச்சினைக்கு அமைதியான முறையில் அரசியல் தீர்வு காண்பதில் இந்தியாவுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு ஐந்து நாள் பயணமாக கிளம்புவதற்கு முன்பு செனட் சபையின் வெளியுறவு விவகார கமிட்டி உறுப்பினர்களிடையே பேசினார் ஹில்லாரி.
அப்போது அவர் கூறுகையில், இலங்கைப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் இந்தியாவுக்கு மிக முக்கிய, மிகப் பெரிய பங்கு உள்ளது. பிராந்தியப் பிரச்சினைகள் மட்டுமல்லாமல், உலகளாவிய பிரச்சினைகளிலும் இந்தியாவுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.
இவையெல்லாம் குறித்து நான் இந்தியப் பயணத்தின்போது இந்தியத் தலைவர்களுடன் விவாதிப்பேன்.
இந்தியாவுடன் மிகவும் விரிவா முறையில் ஆக்கப்பூர்வமான வகையில் எனது பேச்சுக்கள் அமையும்.
இந்தியா, அமெரிக்கா இடையே இதுவரை இல்லாத அளவு விரிவான முறையில் பேச்சுக்கள் அமையும் என்றார் ஹில்லாரி.
இன்று இந்தியா வரும் ஹிலாரி 5 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
ஐஎம்ப் கடன்-தொடரும் இழுபறி:
இதற்கிடையே இலங்கைக்கு கடன் வழங்குவது தொடர்பாக சர்வதசே நாடுகள் எழுப்பும் கருத்துக்கள் பரிசீலிக்கப்படும் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எப்) தெரிவித்துள்ளது. இதனால் கடன் கிடைக்குமா என்பதில் தொடர்ந்து இழுபறி நிலவுகிறது.
சர்வதேச நிதியத்திடம் இலங்கை 1.9 பில்லியன் டாலர் கடனுதவி கோரியுள்ளது. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதன் காரணமாக கடனுதவியை அளி்ப்பதில் சர்வதேச நிதியம் தாமதித்து வருகிறது.
இந்த நிலையில், சர்வதேச நாடுகள் இதுதொடர்பாக தெரிவிக்கும் கருத்துக்களை நாங்கள் கவனத்தில் கொள்வோம் என்று நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் கரோலின் அட்கின்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடன் உதவி தருவது குறித்து தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. சர்வதேச நாடுகளின் கருத்துக்களையும் நாங்கள் பரிசீலிப்போம் என்றார்.
ஏற்கனவே கடன் உதவி குறித்த பிரச்சினை நிலுவையில் உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளன. எதுவும் நடப்பது போலத் தெரியவில்லை என்று இங்கிலாந்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன்












Click it and Unblock the Notifications