3 வயது குழந்தையை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை
தர்மபுரி: தர்மபுரி அருகே மூன்று வயது குழந்தையை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ளது சிவா காலனி.
இந்த பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம் (30). கார் டிரைவர். இவரது மனைவி சத்யா (27) இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது.
இவர்களுக்கு கலா (8), சச்சின்குமார் (5), விஜயராகவன் (1) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி கருத்து மோதல் இருந்து வந்தது.
இந்த நிலையில், கலா, சச்சின்குமார் ஆகியோர் பள்ளிக்கு சென்ற தருணத்தில், சத்யா தனது ஒரு வயது குழந்தை விஜயராகவனை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு, சென்றவர் அதன் பின்பு அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் சத்யாவைத் தேடி அவரது கணவர் சிவலிங்கம் மற்றும் உறவினர்கள் விடிய விடிய தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் மருத்துவமனை அருகே உள்ள ஒரு கிணற்றில் சத்யா அவரது குழந்தை விஜயராகவன் ஆகியோர் பிணமாக கிடைந்துள்ளனர்.
தகவல் அறிந்த சிவலிங்கம் அங்கு சென்று பார்த்து கதறி அழுதார்.
போலீசார் விசாரணையில் சத்யா தனது குழந்தையை கிணற்றில் வீசி கொன்று விட்டு தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதனையடுத்து, பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.