For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜ்யசபா-அமைச்சர் ஆங்கிலத்தில் பேசியதால் அமளி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் ஆங்கிலத்தில் பதிலளித்ததால் ராஜ்யசபாவில் பெரும் அமளி ஏற்பட்டது.

ராஜ்யசபா கேள்வி நேரத்தின்போது அமைச்சர் ஜெயராம் ரமேஷ், ஆங்கிலத்தில் பதிலளிக்க ஆரம்பித்தார். இந்தக் கேள்வி இந்தியில் கேட்கப்பட்டிருந்தது. கேட்டிருந்தவர் பாஜக உறுப்பினர் கல்ராஜ் மிஸ்ரா.

இந்தியில் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ஆங்கிலத்தில் பதிலளித்ததை கல்ராஜ் மிஸ்ரா கடுமையாக ஆட்சேபித்தார்.

அவர் பேசுகையில், அமைச்சருக்கு இந்தி நன்றாகத் தெரியும். மேலும் கேள்வி இந்தியில் கேட்கப்பட்டுள்ளது. எனவே அமைச்சர் எப்படி ஆங்கிலத்தில் பதிலளிக்கலாம் என்று ஆவேசமாக கேட்டார்.

இதற்கு ரமேஷ் இந்தியில் பதிலளிக்கையில், கல்ராஜ் மிஸ்ராஜி, முலாயம் சிங்கிடமிருந்த இந்த வியாதி இப்போது உங்களையும் தொற்றிக் கொண்டு விட்டதா என்றார்.

இதற்கு பாஜக, சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் கடும் ஆட்சேபனை எழுப்பி அமளியில் இறங்கினர். அக்கட்சிளைச் சேர்ந்த உறுப்பினர்கள் எழுந்து, இந்தி என்பது வியாதி அல்ல என்று கூறினர்.

இந்த விவகாரத்தால், சபையில் சிறிது நேரம அமளியாக இருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X