ஈழ அகதிகளுக்கு வேலை தரலாம்-போலீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அகதிகள் முகாம்களில் தங்கியிருப்போருக்கு எந்தவித நிபந்தனையும் விதிக்காமல் அவர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளலாம் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகளின் கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.
இதில் மப்பேடு, காக்களூர் சிப்காட் பகுதிகளில் உள்ள 52 தொழிற்சாலைகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு எஸ்.பி. சாரங்கன் தலைமை வகித்தார். அவரிடம், பல நிறுவனத்தினர், அகதிகளுக்கு எங்களது நிறுவனங்களில் வேலை தரலாமா என்று வினவினர்.
அதற்கு எஸ்.பி சாரங்கன் பதிலளிக்கையில், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு முறையாக உள்ள அகதிகளுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி தாராளமாக வேலை வாய்ப்பு அளிக்கலாம் என்றார்.












Click it and Unblock the Notifications