சென்செக்ஸில் இன்று சிவப்பு மயம்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: தொடர்ந்து 5 நாட்கள் சக்கைப் போடு போட்ட இந்திய பங்கு வர்த்தகம், இன்று டல்லடித்தது. காலையில் வர்த்தகம் ஆரம்பித்ததிலிருந்தே 100 புள்ளிகள் இறங்குமுகத்திலேயே இருந்தது சென்செக்ஸ்.
பெரிய நிறுவனங்களின் பங்குகளும் குறைந்த லாபத்திலேயே கைமாறின, அல்லது குறைந்த அளவு நஷ்டம் சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் இன்று வீழ்ச்சிப் போக்கு காணப்பட்டது. 30 புள்ளிகள் குறைந்தப 4472 ஆக இருந்தது நிப்டி.
டிசிஎஸ், கெய்ல், சுஸ்லான், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பிஎச்இஎல், என்டிபிசி, டிஎல்எப், ஸ்டெர்லைட், ஏசிசி, ஐடிசி போன்றவை நஷ்டத்தைச் சந்தித்த பிற பெரிய நிறுவனங்கள்.
வர்த்தக நேர முடிவில் 114 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ் 15,076 புள்ளிகளில் நிலைபெற்றது.












Click it and Unblock the Notifications