For Daily Alerts
Just In
ஓரினச் சேர்க்கை-தந்தையின் 'காதலரைக்' கொன்ற மகன்
கான்பூர்: தனது தந்தையுடன் ஓரினச் சேர்க்கை உறவு வைத்திருந்த நபரை மகன் கொலை செய்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் டாக்டர் கிருஷ்ண தேவ் ராஜ் ஸ்ரீவத்சவா. இவர் அரசு துணை தலைமை மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
இவருக்கும், 38 வயதான ராஜு திவிவேதி என்பவருக்கும் இடையே ஓரினச் சேர்க்கை உறவு இருந்து வந்தது.
இதனால் வேதனை அடைந்தார் ஸ்ரீவத்சவாவின் மகன் அனுபவ். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பசுபதி நகரில் பகுதியில் உள்ள ராஜு திவிவேதியின் வீட்டுக்குச் சென்ற ஸ்ரீவத்சவாவின் மகன், திவிவேதியைக் கொலை செய்தார்.
இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Comments
Story first published: Wednesday, July 22, 2009, 14:51 [IST]