தமிழகத்தில் 3,02,543 இலங்கை அகதிகள்!
டெல்லி: இலங்கையில் நடந்த போர் காரணமாக இதுவரை மொத்தம் 3,02,543 தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மக்கான் கூறுகையல்,
இலங்கையிலிருந்து 24.07.1983 முதல் 02.07.09 வரை நான்கு கட்டங்களாக மொத்தம் 3,02,543 தமிழ் அகதிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். அவர்களது வருகை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதுவரை சுமார் 1 லட்சம் அகதிகள் அவர்களுடைய சம்மதத்துடன் இலங்கைக்கு இரண்டு கட்டங்களாக மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
சம உரிமைக்கு முயற்சி..
இந் நிலையில் இலங்கை பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் ஆலோசனை நடத்தினார். அப்போது எம்பிக்களின் கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு அவர் பதிலளித்தார்.
அவர் கூறுகையி்ல், இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து மேற்கொள்ளும் என்றார்.












Click it and Unblock the Notifications