புலிகளை ஒழிக்கும் வரை தமிழர்கள் ஊர் திரும்ப முடியாது-இலங்கை
கொழும்பு: முகாம்களில் உள்ள அகதிகளுடன் விடுதலைப் புலிகளும் ஊடுருவியுள்ளதாகவும். அவர்களை கண்டுபிடித்து முற்றிலும் அழிக்கும் வரை முகாம்களில் உள்ள மக்களை சொந்த ஊருக்கு போக விட மாட்டோம் என்றும் இலங்கை கூறியுள்ளது.
இலங்கையில் போர் பகுதியில் இருந்து வெளியேறிய 3 லட்சம் தமிழர்கள் ராணுவ அகதி முகாம்களில் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை 6 மாதத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்போம் என்று அதிபர் ராஜபக்சே கூறினாலும் அந் நாட்டு மனித உரிமைத்துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே இதற்கு எதிர்மறையாகப் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில்,
நாங்கள் அகதி முகாம்களில் உள்ள மக்களின் நலனில் மட்டுமல்லாமல் நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள மக்களின் நலனிலும் அக்கறை காட்ட வேண்டியுள்ளது. எனவே தான் இடம் பெயர்ந்த மக்களின் நடமாடும் சுதந்திரம் கட்டுப்பத்தப்பட்டுள்ளது.
முகாம்களில் உள்ள அகதிகளுடன் விடுதலைப் புலிகளும் ஊடுருவி இருக்கிறார்கள். அவர்களை கண்டுபிடித்து முற்றிலும் அழிக்கும் வரை முகாம்களில் உள்ள மக்களை சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம்.
முகாம்களில் உள்ளவர்களில் சிறுவர்கள், வயதானவர்கள், கர்ப்பிணிகள் என 9,000 பேர் இதுவரை வெளியேற அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 14,000 பேர் முகாமுக்குள்ளேயே தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைய அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
ரோகித-எஸ்.எம்.கிருஷ்ணா ஆலோசனை:
இந் நிலையில் தாய்லாந்து நாட்டின் புகெட் நகரில் நேற்று நடந்த தென் கிழக்கு ஆசிய நாடுகளின் வெளிவுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோகித பொகல்லகமாவை சந்தித்துப் பேசினார்.
அப்போது, தமிழர் பிரச்சனையில் எல்லா வகையிலும் உதவி செய்ய இந்தியா தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல நாங்கள் அனுமதி அளித்தும் அதற்கு போதிய ஆதரவு இல்லாததால் அவர்களில் பலர் தொடர்ந்து முகாம்களிலேயே தங்கி இருப்பதாக பொகல்லகாமா தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications