மாணவர் கொலை-பி.இ. மாணவர் முன்ஜாமீன் ரத்து
சென்னை: என்ஜீனியரிங் கல்லூரியில் நடந்த மோதலில் காயமடைந்து, கோமாவில் இருந்து பின்னர் மரணமடைந்த மாணவர் வழக்கில் பி.இ. மாணவருக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கவும் அது உத்தரவிட்டுள்ளது.
சென்னை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பார்த்திபன், ராஜ்குமார் ஆகியோர் படித்து வந்தனர். மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி ராஜ்குமார் தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் மாணவர் பார்த்திபன் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி முன்ஜாமீன் பெற்றார்.
இந்த நிலையில் கோமாவில் இருந்த ராஜ்குமார் ஜுன் 26-ந் தேதி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக போலீசார் மாற்றினார்கள்.
இதையடுத்து பார்த்திபனுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யவேண்டும் என்று போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதி ஆர்.ரகுபதி விசாரணை செய்து, பார்த்திபனுக்கு வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்து நேற்று தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ராஜ்குமார் காயம் அடைந்த விவரத்தை போலீசார் முன்ஜாமீன் மனு விசாரணையின்போது சரியாக தெரிவிக்கவில்லை. தாக்குதல் நடந்த சம்பவத்தை போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்யவில்லை. காயம் அடைந்தவரின் மாமா புகார் கொடுத்த பிறகுதான் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாணவர் தலையில் லேசான காயம் என்றும், அவர் சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்றுவிட்டார் என்றும் தெரிவித்ததால்தான், பார்த்திபனுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
ஆனால், காயத்தின் கடுமையை போலீசார் கூறவில்லை. ராஜ்குமார் கோமாவில் தொடர்ந்து இருந்துள்ளார். இந்த உண்மையெல்லாம் போலீசார் தெரிவிக்காதது துரதிர்ஷ்டவசமானது.
மேலும் இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில், அதுவும் வகுப்பறையில் நடந்துள்ளது. பல உண்மைகளை மறைத்ததை ஏற்க முடியாது. எனவே கொலை வழக்காக மாற்றப்பட்டிருப்பதால் விசாரணைக்கு நிறைய தேவைப்படும்.
ஆகவே, மாணவர் பார்த்திபனை போலீஸ் காவலில் வைத்து விசாரித்தால்தான் விவரங்கள் வெளிவரும். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பலர் கைது செய்யப்படாதது துரதிர்ஷ்டவசமானது.
போலீசார் தவறான அணுகுமுறையை கையாண்டியிருப்பதால் இந்த கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படுகிறது. பார்த்திபனுக்கு ஏற்கனவே வழங்கிய முன்ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
-
சென்னையின் இருதயத்தில் நடக்கும்.. பைபாஸ் சர்ஜரி.. 100 கி.மீ சாலைகள் விரிவாக்கம்.. அடியோடு மாறுது! -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம்












Click it and Unblock the Notifications