ஓகேனக்கல் குடிநீர் திட்ட அதிகாரியாக பன்சல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரியாக பி.கே.பன்சல் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வணிக வணிகத்துறை இணை ஆணையராக (நிர்வாகம்) இருந்த எஸ்.முருகையா, பொதுத்துறை இணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
உணவு, சிவில் சப்ளைஸ் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இணை ஆணையராக உள்ள வி.சந்திரசேகரன், கைத்தறி மற்றும் ஜவுளித்துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுத்துறை இணை ஆணையராக இருந்து வரும் பங்கஜ்குமார் பன்சல், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் இணை மேலாண் இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரே ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட திட்ட இயக்குனராகவும் செயல்படுவார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications