ஒன்றரை ஆண்டுகளில் அனைவருக்கும் பல்நோக்கு அடையாள அட்டை!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் பல்வகைப் பயன்பாட்டுக்குரிய அடையாள அட்டை வழங்கப்படும் என்று இந்தத் திட்டத்தின் தலைவர் நந்தன் நிலேகனி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் குடிமக்களுக்கு தனிப்பட்ட எண்ணுடன் கூடிய பல்நோக்கு அடையாள அட்டை வழங்குவதற்காக, தனி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய 'கேபினட்' அமைச்சர் அந்தஸ்துள்ள இந்த ஆணையத்தின் தலைவராக இன்போஸிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகெனி, நேற்று டெல்லியில் பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், குடிமக்கள் பற்றிய தனிப்பட்ட மற்றும் மக்கள் தொகை விவரங்களை உள்ளடக்கியதாக இந்த அடையாள அட்டை இருக்கும் என்று தெரிவித்தார்.
இந்த அடையாள எண்களின் முதல் தொகுப்பு அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications