ஜெவை தொடர்பு கொள்வதில் இடதுசாரிகளுக்கு சிரமம்!

நடைபெற இருக்கும் தேர்தலை புறக்கணிப்பதற்கு அதிமுக கூறியிருக்கும் காரணங்களை எல்லாம் நாங்களும் கூறி வருகிறோம். அவை அனைத்தும் உண்மை தான். நாங்கள் அதை மறுக்கவில்லை.
ஆனால், அதை எதிர்த்து போராடாமல் ஒதுங்கி கொண்டால் மக்களுக்கு வழிகாட்ட ஆள் இல்லாமல் போய்விடும். அதனால் தான் நாங்கள் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்திருக்கிறோம்.
தேர்தல் போட்டியில் இருந்து விலகுவது என்பது சரி அல்ல. போராடுவது என முடிவு செய்வது தான் சரியானது. எங்களைப் பொறுத்தவரை மத்தியில் பாஜக, காங்கிரசுக்கு எதிரான அரசியல் அணி தொடரும். அவர்களுக்கு எதிரான மாற்று அணியை உருவாக்கும் முயற்சிகள் தொடரும்.
அதிமுக அணியில் தொடருகிறோமா, இல்லையா என்பது பிரச்சனை அல்ல. அரசியலில் எங்களது தோழமை நீடிக்கிறது. உத்திகளில் தான் மாறுபடுகிறோம். அதிமுக மீது எந்த குற்றச்சாட்டையும் நாங்கள் சொல்லவில்லை. எங்களுக்குள் சண்டையோ சச்சரவோ இல்லை.
எங்களைக் கேட்காமல் அவர்கள் தனித்து முடிவு எடுத்துவிட்டதாகவும் நாங்கள் கூறவில்லை என்றார்.
அதிமுக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கோருகிறீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு,
நாங்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் நிலையில் அவர்கள் இல்லை. எனவே அவர்கள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பத்திரிக்கைகள் மூலம் கோருகிறாம். மாற்றிக் கொண்டால் வரவேற்போம். இதை பொது வேண்டுகோளாக விடுக்கிறோம் என்றார்.
இதன்மூலம் இடதுசாரிகளால் முயன்றும் கூட ஜெயலலிதாவை சந்திக்க முடியவி்ல்லை என்பது தெளிவாகிறது. இதே நிலை தான் டாக்டர் ராமதாசுக்கும் உள்ளதாகக் கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
கூட்டணியில் தலைமை யாரும் அல்ல..
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வரதராஜன் கூறுகையில், கூட்டணியில் தலைமை என்பதெல்லாம் கிடையாது. தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்ளும் சகாக்கள் தான் அனைவரும் என்றார் நச்சென்று.












Click it and Unblock the Notifications