குழப்பத்தில் ஜெ-மீண்டும் அதிமுக மா.செக்கள் கூட்டம்

தான் ஓய்வெடுத்து வரும் கொடநாடு எஸ்டேட்டுக்கு கடந்த வாரம் கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்திய ஜெயலலிதா சட்டசபை இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தார். அவரது இந்த முடிவை மதிமுக, பாமக ஆகியவை வரவேற்றன.
ஆனால் சிபிஎம் இந்த முடிவை சுத்தமாக ஏற்கவில்லை. இந்தக் கட்சியுடன் தேசிய அளவில் இணைந்தே இருக்கும் சிபிஐயும், வேறு வழியில்லாமல் சிபிஎம் முடிவுக்குக் கட்டுப்பட நேரிட்டது. இரு கட்சிகளும் தற்போது ஆளுக்கு 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இந் நிலையில் 25ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்களை வரவழைத்த ஜெயலலிதா அவர்களுடன் ஆலோனை நடத்தினார். இக்கூட்டத்தில் அதிமுகவினர் யாரும் வாக்களிக்கக் கூடாது என்று அவர் உத்தரவிட்டார்.
இந் நிலையில் தற்போது மீண்டும் நாளை மாவட்டச் செயலாளர்களை கொடநாடு எஸ்டேட்டுக்கு அழைத்துள்ளார் ஜெயலலிதா. இது 2வது கட்ட ஆலோசனைக் கூட்டம் எனக் கூறப்படுகிறது.
நாளை காலை 11 மணிக்கு கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், இடைத்தேர்தல் குறித்தும், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் மீண்டும் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
கடந்த 10 நாட்களில் ஜெயலலிதா கூட்டியுள்ள 3வது முக்கியமான கட்சி நிர்வாகிகளின் கூட்டம் இதுவாகும். இதனால் இடைத் தேர்தல் விஷயத்தில் அதிமுக பெரும் குழப்பத்தில் இருப்பதாகத் தெரிகிறது.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
9 ஆண்டுகள் கழித்து! அதிமுக தலைமை அலுவலகத்தில் நுழைந்த டிடிவி தினகரன்! மாடத்தில் Nostalgic மொமன்ட்ஸ்! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
ADMK: பாஜக 27, பாமக 18, அமமுக 11! அப்போ அதிமுக 172? வெளியான உத்தேச பட்டியல்? -
தமிழ்நாடு தேர்தல் சர்வே.. நாம் தமிழரை முந்தி 3ம் இடம் பிடிக்கும் தவெக விஜய்.. சீமானுக்கு பின்னடைவு -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை!











Click it and Unblock the Notifications