டாடா டோகோமோவுக்கு தமிழகத்தில் 5 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள்!
சென்னை: டாடா நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள டாடா ஜிஎஸ்எம் டோகோமோ ப்ளானுக்கு மட்டும் ஒரு மாதத்தில் 5 லட்சம் புதிய சந்தாதாரர்கள் சேர்ந்துள்ளனர்.
டாடா டோகோமோ அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு மாதம்தான் ஆகிறது. இந்த புதிய திட்டப்படி வெளிச் செல்லும் அழைப்புகளுக்கான (அவுட்கோயிங்) கட்டணங்கள் நொடிக்க்கு ஒரு பைசா எனக் கணக்கிடப்படுகிறது. இதனால், நாம் பேசாத நேரத்துக்கும் சேர்த்து பணம் செலுத்தும் அவசியமில்லாமல் போகிறது.
இந்தத் திட்டம் வாடிக்கையாளர்களிடையே பிரபலமாகியுள்ளதால், தமிழகத்தில் மட்டும் ஒரு மாதத்துக்குள் 5 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இதில் இணைந்துள்ளனர்.
775 நகரங்கள் மற்றும் 4370 கிராமங்களில் இந்த டோகோமோ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பல புதிய சலுகைகளையும் இந்த டோகோமோவுடன் தரத் திட்டமிட்டுள்ளதாக டாடா டோகோமோவின் சிஇஓ நாகா வேலமுரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications