ராணி எலிசபெத்துக்கு சீக்கிய பாதுகாவலர்கள்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இங்கிலாந்து வரலாற்றிலேயே முதல் முறையாக ராணி எலிசபெத்தின் பாதுகாப்புப் படையில் 2 சீக்கியர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
அந்த பெருமையைப் பெற்றுள்ள சீக்கிய வீரர்களின் பெயர் - சிம்ரஞ்சித் சிங் (26), சர்வித் சிங்.
இவர்களில் சிம்ரஞ்சித் சிங் ராணியின் கிரீடம் மற்றும் நகைகள் உள்ளிட்டவற்றைப் பாதுகாக்கும் பிரிவில் இடம் பெற்றிருப்பார்.
சர்வித் சிங், ராணியின் பாதுகாப்புப் படைப் பிரிவில் இடம் பெறுகிறார்.
வில்ட்ஷயர் அரண்மனையில் சிம்ரஞ்சித் சிங் பணியாற்றுவார். சப்போல்க்கில் உள்ள ராணுவப் படைப் பிரிவில் சர்வித் சிங் இடம் பெறுவார்.
சிம்ரஞ்சித் சிங், சிப்பன்ஹாமுக்கு அருகில் உள்ள 21 சிக்னல் பிரிவில் பணியாற்றி வருகிறார். சர்வித் சிங், வட்டிஷாமில் உள்ள 3 ராணுவ ஏர் கார்ப்ஸ் ரெஜிமென்ட்டைச் சேர்ந்தவர் ஆவார்.












Click it and Unblock the Notifications