சென்னை, பெங்களூர் விமான நிலையங்களும்...ரெட்டி
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: சென்னை, பெங்களூர் சர்வதேச விமான நிலையங்கள் ஆந்திராவுக்கு மிக அருகில் உள்ளன. எனவே இவை ஆந்திராவுக்கே சொந்தமானது என்று கூறியுள்ளார் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி.
ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், ஆந்திர மாநில எல்லைப் புற மாவட்டங்களான சித்தூர் மற்றும் அனந்தப்பூர் மாவட்டங்களிலிருந்து 45 நிமிட பயண தூரத்தில்தான் சென்னை, பெங்களூர் விமான நிலையங்கள் உள்ளன.
சென்னைக்கு அருகிலும் (ஸ்ரீசிட்டி), பெங்களூருக்கு அருகிலும் (லெபாக்ஷி) மிகப் பெரிய சிறப்பு பொருளாதார மண்டலங்களை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.
அந்த வகையில் பார்த்தால் ஆந்திராவுக்கு தற்போது ஷாம்சாபாத் சர்வதேச விமான நிலையம் உள்பட மூன்று சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன என்றார் ரெட்டி.












Click it and Unblock the Notifications