Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துபாய் விமானத்தில் கோளாறு - சென்னையில் 390 பயணிகள் தவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையிலிருந்து துபாய்க்குப் புறப்பட வேண்டிய விமானம் கோளாறு காரணமாக கிளம்பத் தாமதமானாதால், 390 பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.

சென்னையிலிருந்து நேற்று இரவு 9.30 மணிக்கு துபாய் செல்லும் விமானம் கிளம்பத் தயாராக இருந்தது. விமானத்தில் ஏற 390 பயணிகள் காத்திருந்தனர்.

ஆனால், விமானத்தில் கோளாறு ஏற்பட்டிருக்குமாறு கூறிய அதிகாரிகள், அதுவரை பயணிகளை ஓய்வறையில் அமருமாறு கூறி அமர வைத்தனர்.

ஆனால் நள்ளிரவு 1 மணிக்கு மேலாகியும் விமானம் கிளம்பும் வழியைக் காணாததால் பயணிகள் கோபமடைந்தனர்.

சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் பொறுப்பற்ற போக்கைக் கண்டித்து கோஷமிட்டு போராட்டத்தில் குதித்தனர்.

இதையடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்படுவதாகவும், இன்று இரவு 9.30 மணிக்கு விமானம் கிளம்பும் எனவும் சம்பந்தப்பட்ட நிறுவனம் அறிவித்தது.

இதையடுத்து 390 பயணிகளும் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+