கங்குலிக்குச் சொந்தமான ஹோட்டலில் விபச்சாரம் நடப்பதாக புகார்

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தி சேனல் 10 என்ற வங்க மொழிச் சேனலில் இதுதொடர்பான ஸ்டிங் செய்தியை வெளியிட்டுள்ளனர்.
அதில், கொல்கத்தாவில் உள்ள கங்குலிக்குச் சொந்தமான ஹோட்டலில், உயர் ரக விபச்சாரம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களது செய்திக்கு ஆதாரமாக வீடியோ காட்சிகளையும் அது ஒளிபரப்பியுள்ளது. அதில், ஹோட்டல் டிஸ்கோ அரங்கில், டான்ஸ் ஆடும் பெண்கள், வாடிக்கையாளர்களுடன் இன்பமாக இருக்க பேரம் பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த ஹோட்டல் பார்க் தெருவில் உள்ளது. தனது சகோதரர்களுடன் இணைந்து இந்த ஹோட்டலை நிர்வகித்து வருகிறார் கங்குலி.
இந்த ஹோட்டல் ஊழியர்கள், வார இறுதி நாட்களில் இரவு நீண்ட நேரத்திற்கு நடன நிகழ்ச்சிகளை நடத்துகின்றனராம். ஹோட்டலின் பாரில் இது நடைபெறும். அப்போது விபச்சார புரோக்கர்களால் டான்ஸர்கள் என்ற பெயரில் உள்ளே அனுப்பப்படும் பெண்கள், வாடிக்கையாளர்களை அணுகி ரேட் பேசுகின்றனராம்.
இந்தப் புகார் குறித்து கங்குலி தரப்பிலிருந்து இதுவரை எந்த விளக்கமும் இல்லை.
போலீஸாரிடம் கங்குலி புகார்..
இதற்கிடையே, இந்த ஸ்டிங் நடவடிக்கை குறித்து காவல்துறையின் உதவியை நாடியுள்ளார் கங்குலி. மேலும், சட்டப்பூர்வ ஆலோசனையையும் அவர் கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்ட ஆலோசனையை நான் கோரியுள்ளேன். போலீஸ் கமிஷனர் கெளதம் சக்ரவர்த்தியையும் நான் சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்துமாறு கோரியுள்ளேன்.
இந்த செய்தியால் நான் மனம் உடைந்து போய் விடவில்லை. இது சகஜம்தான். எனவே இதைக் கண்டு நான் சங்கடப்படவில்லை. இதை உரிய முறையில் சமாளிப்பேன் என்றார்.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி காட்டிய வீடியோ காட்சிகள் அடங்கிய சிடிக்களை போலீஸார் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து துணை ஆணையர் ஜாவேத் ஷமீம் கூறுகையில், சிடிக்களைப் பெற்று அதை ஆய்வு செய்து வருகிறோம். அதன் பின்னர் அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்யப்படும்.
ஹோட்டல்களில் வெறும் பாடகிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. தொழில்முறை டான்ஸர்களுக்கு அனுமதி கிடையாது என்றார் அவர்.
இருப்பினும் தேவையான உரிமங்களை தங்களது ஹோட்டல் வைத்துள்ளதாக கங்குலியின் அண்ணன் ஸ்னேஹசிஸ் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications