ஸ்டிரைக்கில் பங்கேற்க மாட்டோம்! -இன்டிகோ
மும்பை: தனியார் விமான நிறுவனங்கள் சில அறிவித்துள்ள ஸ்ட்ரைக்கில் பங்கேற்க மாட்டோம். அன்றைய தினம் அரசுக்கும் பயணிகளுக்கும் உதவும் வகையில் கூடுதலாக விமானங்களை இயக்குவோம் என இன்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்ட்ரைக்கை அறிவித்துள்ள இந்திய விமான நிறுவன கூட்டமைப்பில் தனியார் விமான நிறுவனமான இன்டிகோவும் ஒரு உறுப்பினராக உள்ளது.
ஆனால் இப்போதைய ஸ்ட்ரைக் அடிப்படையில்லாதது, மக்களை கோபத்துக்குள்ளாக்குவது, என கருத்து தெரிவித்துள்ள இன்டிகோ, ஆகஸ்ட் 18-ம் தேதியன்று வழக்கம்போல விமானங்களை இயக்கப் போவதாக அறிவித்துள்ளது. தேவைப்பட்டால் அரசுக்கு உதவியாக கூடுதல் விமானங்களை இயக்கப் போவதாகக் கூறியுள்ளது.
ஸ்ட்ரைக்கை அறிவித்துள்ள கிங்பிஷர், ஜெட் உள்ளிட்ட விமான நிறுவனங்களுக்கு இது பெரிய அதிர்ச்சியைத் தந்துள்ளது.
இதற்கிடையே இந்த ஸ்ட்ரைக் குறித்து விளக்கமளித்துள்ள ஜெட் ஏர்வேஸ் தலைவர் நரேஷ் கோயல், நாங்கள் அரசை மிரடடவில்லை, எங்கள் நிலைமையைப் புரிய வைக்க முயற்சிக்கிறோம் என பல்டியடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications