For Quick Alerts
For Daily Alerts
Just In
சங்கரராமன் கொலை வழக்கு-சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை
புதுச்சேரி: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் சாட்சிகளிடம் இன்று குறுக்கு விசாரணை தொடங்கியது.
இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தி்ல் நடந்து வருகிறது. நீதிபதி கிருஷ்ணராஜா முன்னிலையில் நடக்கும் இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை இன்று துவங்கியது.
சங்கரராமனின் மனைவி பத்மா, மகள் உமா, மகள் அனந்த் குமார் சர்மா, காஞ்சி மடத்தின் கணக்காளர் கணேஷ் ஆகியோரிடம் விஜயேந்திரரின் வழக்கறிஞர் தினகரனும், அரசுத் தரப்பில் வழக்கறிஞர் தேவராஜும் இந்த நால்வரிடமும் குறுக்கு விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுந்தரேச அய்யர், அப்பு, ரகு உள்ளிட்ட 20 பேரும் இன்று நேரில் ஆஜராயினர்.
ஆனால் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் வரவில்லை. இதற்கான மனு நீதிபதியிடம் தாக்கல் செய்யப்பட்டது.
Comments
Story first published: Tuesday, August 4, 2009, 15:18 [IST]