For Daily Alerts
Just In
காஷ்மீரில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் டாங்தர் பகுதியிலுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே 3 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.
இதையடுத்து அவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
அதே போல குப்வாரா மாவட்டத்தின் கீரன் பகுதியில் நிகழ்ந்த மற்றொரு ஊடுருவல் முயற்சியையும் பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர். இங்கு 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதே மாவட்டத்தில் பார்க்கியான் கிராமத்தில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
Comments
Story first published: Wednesday, August 5, 2009, 17:31 [IST]