For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காஷ்மீரில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் டாங்தர் பகுதியிலுள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே 3 தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர்.

இதையடுத்து அவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

அதே போல குப்வாரா மாவட்டத்தின் கீரன் பகுதியில் நிகழ்ந்த மற்றொரு ஊடுருவல் முயற்சியையும் பாதுகாப்புப் படையினர் முறியடித்தனர். இங்கு 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதே மாவட்டத்தில் பார்க்கியான் கிராமத்தில் ஊடுருவ முயன்ற 2 தீவிரவாதிகளையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X