கொலை: அப்பாவிகள் கைது-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!
திருச்சி: திருச்சி அருகே பெண் கொலை வழக்கை முறையாக விசாரிக்காமல் அப்பாவிகள் மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்த டி. இடையபட்டியைச் சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவரது மனைவி லட்சுமி (38); கடந்த மாதம் அங்குள்ள காட்டுப் பகுதியில்கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த சம்பவம் குறித்து வையம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரவேல் பிணத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அப்போது, லட்சுமி கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறி, அதே பகுதியைச் சேர்ந்த தங்கராசு, நாகராசு, கோபு ஆகியோரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்.
இந் நிலையில், எட்டு பெண்களை கற்பழித்து கொன்றதாக, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த கொண்டையன் பேட்டையைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் கைது செய்யப்பட்டார்.
குப்புசாமியிடம் நடத்திய விசாரணையில், லட்சுமியை கற்பழித்து கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம் அளித்தார்.
இதையடுத்து இந்தக் கொலை வழக்கில், சம்பந்தம் இல்லாத அப்பாவிகள் மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து வழக்கை முறையாக விசாரணை நடத்தாத வையம்பட்டி இன்ஸ்பெக்டர் குமாரவேல் மீது நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட எஸ்.பி. கலியமூர்த்தி பரிந்துரைத்தார்.
இதையடுத்து, குமாரவேலை திருச்சி டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
அப்பாவிகள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து தகுந்த நேரத்தில் நடவடிக்கை எடுத்த திருச்சி எஸ்.பி. கலியமூர்த்திக்கு பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications